அன்னிய முதலீட்டு வரம்பு அதிகரிப்பு

அன்னிய முதலீட்டு வரம்பு அதிகரிப்பு
Updated on
1 min read

அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதன்படி அன்னிய முதலீட்டாளர் முதலீடு செய்யும் வரம்பு 500 கோடி டாலரிலிருந்து 1,000 கோடி டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 3,000 கோடி என்ற நிலையில் எவ்வித மாற்றமும் செய்யப் படவில்லை.

இப்போது அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவான 500 கோடி டாலரில் 22.88 சதவீத அளவுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக என்எஸ்டிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in