Last Updated : 15 Aug, 2016 09:04 AM

 

Published : 15 Aug 2016 09:04 AM
Last Updated : 15 Aug 2016 09:04 AM

7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு: ரூ.45,025 கோடி உயர்வு

சந்தை மதிப்பில் முதல் 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 45,025 கோடி உயர்ந்திருக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் சன்பார்மா ஆகிய நிறுவனங் களை தவிர மீதமுள்ள ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் டிசிஎஸ் பங்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது. ரூ.16,443 கோடி உயர்ந்து இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,38,389 கோடியாக இருக்கிறது. ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.6,615 கோடி உயர்ந்தது. மாறாக சன்பார்மா சந்தை மதிப்பு 9,759 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x