Last Updated : 26 Jul, 2016 09:54 AM

 

Published : 26 Jul 2016 09:54 AM
Last Updated : 26 Jul 2016 09:54 AM

விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: 4 வாரங்களுக்குள் விளக்கம் தர உத்தரவு

பிரிட்டனில் தங்கியுள்ள தொழி லதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது. வங்கிகளிடம் பெற்ற கடன் தொடர்பாக விளக்கம் அளிக் காமல் நீதிமன்ற அவமதிப்பு செய்வ தற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீ ஸில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நேற்று இது தொடர்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, மல்லையா தனது சொத்து பற்றிய முழு விவரத்தை அளிக்கவில்லை. பிரிட்டன் மது தயாரிப்பு நிறுவ னமான டியாஜியோ அளித்த 4.5 கோடி டாலர் விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர் எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பாரத ஸ்டேட் வங்கியை உள்ள டக்கிய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜென ரல் ரோகத்கியின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நான்கு வாரங் களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கடந்த 14-ம் தேதி நீதிமன்றத் தில் தாக்கல் செய்த சொத்து விவ ரத்தில் தவறான தகவலை மல்லையா தாக்கல் செய்துள்ள தாக முகுல் ரோகத்கி குறிப்பிட்டார்.

மேலும் பல முக்கியமான பண பரிவர்த்தனைகளை மல்லையா மறைத்துள்ளார். சுமார் ரூ. 2,500 கோடி பரிவர்த்தனை விவரத்தை அவர் தெரிவிக்க மறுத்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று அட்டர்னி ஜெனரல் வாதிட்டார்.

தனது சொத்து விவரத்தை தாக்கல் செய்யுமாறு விஜய் மல்லையாவுக்கு முன்னர் நீதிமன் றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சொத்து விவரங் களை சீலிட்ட உறையில் தனது வழக்கறிஞர் மூலம் மல்லையா தாக்கல் செய்திருந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x