Published : 30 Oct 2013 10:22 AM
Last Updated : 30 Oct 2013 10:22 AM

வினீத் நாயர் - இவரைத் தெரியுமா?

#ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்தவர். இப்போது நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கிறார்.

#மெக்கானிக்கல் என்ஜீனியரீங் மற்றும் எக்ஸ்.எல்.ஆர்.ஐ. இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ. படித்தவர்.

#சம்பர்க்ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு மூலம் சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார்.

#இவர் எழுதிய “Employees First, Customers Second: என்னும் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றது. சி.கே. பிரகலாத், ராம்சரண் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் பாராட்டிய புத்தகமும் கூட.

#இப்போது கையில் இருக்கும் வேலையை செய்யாமல், ஏன் இந்த வேலையைச் செய்கிறோம், இதற்கான நோக்கம் என்ன என்று ஆராயும் போதுதான் தலைவன் உருவாகிறான் என்று தன்னிடம் வேலை செய்பவர்களிடம் சொல்வாராம்.

#மேனேஜர்களிடம் அவருக்கு கீழே வேலை செய்யும் நபர்களும், அதிகாரமும் தான் இருக்கும் ஆனால் தலைவரிடத்தில் அவரை பின் தொடர்பவர்களும், அவருடைய தாக்கம் மட்டுமே இருக்கும் என்பது இவரது பிரபலமான ஸ்டேட்மெண்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x