Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

அறிவியல் துறைக்கு முதலீடு தேவை

மேற்கு நாடுகளில் அறிவியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அறிவியல் துறைக்கு செய்யப்படும் முதலீடு இந்தியாவில் செய்யப்படுவதில்லை என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியலாளர் சி.என்.ஆர்.ராவ் தனியார் தொலைக்காட்சி நடத்திய அறிவியல் தீர்வுகள் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்திய மதிப்பீடுகளில் அறிவியலுக்கு கடைசி இடம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை இந்தியர்கள் அறிவியலை மதிக்கிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அறிவியல் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் பட்சத்தில்தான் இந்த துறை வெற்றி அடையும். மேலும் சர்வதேச அளவில் போட்டி போடவேண்டும் என்றால் அதற்கு ஏற்ப கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x