Published : 08 Jul 2016 09:47 AM
Last Updated : 08 Jul 2016 09:47 AM
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால் (பிரெக்ஸிட்) சர்வதேச அளவிலான மந்த நிலை உருவாகாது ஆனால் சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டியன் லகார்ட் தெரிவித்துள்ளார்.
உடனடியாக எதுவும் நடக்காது. ஆனால் உடனடியாக பிரிட்டனில் சில பாதிப்புகள் ஏற்படும், அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியனிலும் பாதிப்பு ஏற்படும். நிச்சயமற்ற சூழல் உருவாவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு நீடிக்கும். ஐரோப்பிய யூனியனை வலுப்படுத்த பிரெக்ஸிட்டை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று லகார்ட் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT