Published : 19 Feb 2014 11:05 AM
Last Updated : 19 Feb 2014 11:05 AM

விரைவில் புதிய தனியார் வங்கிகள்

புதிய தனியார் வங்கிகளுக்கான விண்ணப்பங்களை பிமல் ஜலான் கமிட்டி ஆராய்ந்து வருகிறது. இந்தப் பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இப்பணியில் ஈடுபட்டுள்ள பிமல் ஜலான் கமிட்டி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தன்னுடைய வேலையை முடிக்கும் என்று நிதித்துறை இணை அமைச்சர் நமோநாராயண் மீனா மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

ஜலான் தலைமையிலான கமிட்டி புதிய வங்கி தொடங் குவதற்கு வந்திருக்கும் 25 விண்ணப்பங்களை பரிசீலனை செய்துவருகிறது. கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதியை விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு கடைசி நாளாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது. அப்போது 27 விண்ணப்பங்கள் வந்திருந்தன. டாடா சன்ஸ் மற்றும் வேல்யூ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்து விலகிவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x