Published : 04 Jan 2017 10:29 AM
Last Updated : 04 Jan 2017 10:29 AM

கூகுள் சிஇஓ டெல்லியில் இன்று முக்கிய அறிவிப்பு

சிறு தொழில் நிறுவனங்களுக்கான முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிட இருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை. பெரும்பாலான தொழில் நிறுவனங் களை ஆன்லைனில் கொண்டு வரும் முயற்சியை பெரு நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கூகுள் அறிவிப்பு இருக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் கூகுள் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முது கெலும்பாக இருக்கின்றன. இந்தி யாவின் அடுத்த கட்ட வளர்ச்சி இந்த நிறுவனங்களில்தான் இருக்கிறது. இந்த நிறுவனங்களுடன் இணை வதில் ஆர்வமாக இருக்கிறோம் என கூகுள் நிறுவனத்தின் அழைப்பித ழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x