Published : 22 Jan 2014 11:05 AM
Last Updated : 22 Jan 2014 11:05 AM

உலகின் வளத்தில் பாதி 85 பணக்காரர்களின் கையில்

உலகில் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தில் பாதியளவு 85 பெரும் பணக்காரர்கள் வசம் உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ள பாதி வளமே உலக மக்களிடம் பரவியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டு நிறுவனம் ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வறிக்கை “working for the few” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

டாவோஸ் நகரில் உலக பொருளாதார பேரவை (டபிள்யூஇஎப்) மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏழைகள், பணக்காரர்கள் இடையிலான இடைவெளியானது வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமின்றி வளரும் நாடுகளிலும் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

பெரும் பணக்காரர்கள் அரசியல் அதிகாரத்தின் துணையோடு பொருளாதார விளையாட்டை விளையாடுவதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சில பணக்காரர்களிடம் மட்டுமே பணம் குவிந்ததாதகவும் அதிலும் ஒரு சதவீத குடும்பங்களிடம் 46 சதவீத வளம் குவிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x