எரிவாயுக்காக ரிலையன்ஸ் ரூ.4,500 கோடி முதலீடு

எரிவாயுக்காக ரிலையன்ஸ் ரூ.4,500 கோடி முதலீடு
Updated on
1 min read

ரிலையன்ஸ் மற்றும் அதன் இங்கிலாந்து கூட்டு நிறுவனமான பிபி ஆகியவை எரிவாயு எடுப்பதற்காக இதுவரை ரூ.4,500 கோடி முதலீடு செய்துள்ளன. கேஜி-டி6 பகுதியில் தற்போதைய நிலையிலே உற்பத்தி தொடர்வதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009 ஏப்ரலில் இந்த பகுதியில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியை தொடங்கியது இந்த நிறுவனம். இதுவரை 7 வருடங்கள் முடிந்துவிட்டது. அதிகபட்சமாக கடந்த மார்ச் 2010-ம் ஆண்டு 69.43 MMSCFD உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 8.7 MMSCFD என்னும் அளவிலே உற்பத்தி இருக்கிறது.

உற்பத்தி சரிவை தடுப்பதற்காக தொடர்ந்து இந்த நிறுவனம் முதலீடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது பக்கவாட்டிலும் துளையிடும் பணியிலும் இந்த நிறுவனங்கள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in