Published : 25 Mar 2017 10:33 AM
Last Updated : 25 Mar 2017 10:33 AM
ஓப்போ நிறுவனம் புதிய எப் 3 ரக மொபைலை புதுடெல்லியில் அறிமுகம் செய்தது. செல்போனை பயன்படுத்துபவர்களில் அதிக நபர்கள் செல்பி எடுக்க விரும்புவதாகவும், குறிப்பாக `குரூப் செல்பி’ எடுக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இரு முன் பக்க கேமிராக்களுடன் இந்த போனை அறிமுகம் செய்வதாக ஓப்போ தெரிவித்துள்ளது. ஒரு கேமிரா குரூப் செல்பி புகைப்படத்துக்கு ஏற்றவாறு 120 டிகிரி கோணத்தில் படம் எடுக்க முடியும்.
இந்த செல்போனின் விலை 30,990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற் கான முன்பதிவு மார்ச் 23-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த போன் சந்தைக்கு வரும் என ஓப்போ நிறுவனம் அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் புதிய விளம்பர தூதுவராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT