Published : 03 Oct 2013 03:56 PM
Last Updated : 03 Oct 2013 03:56 PM

முதல் கணக்கு என்றால் என்ன?

முதல் கணக்கு (Capital account)

அரசின் பட்ஜெட்டில் ஒரு பகுதி முதல் கணக்காகும். முதல் கணக்கில் வருவாய், செலவு என இரண்டு பிரிவுகள் இருக்கிறது.

வருவாய்:

1.மாநில அரசுகளுக்கு அரசு நிறுவனங்களுக்கு அல்லது அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த கடன் தொகை திரும்பப் பெறுவதை முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும்.

2. அரசு பெறும் அனைத்துக் கடன்களும் (உள்நாட்டு மற்றும் வெளிநாடு கடன்கள்) முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும்.

செலவு: முதல் கணக்கில் இருக்கும் செலவு அரசுக்கு ஏதாவது வருமானத்தையோ அல்லது சொத்தையோ ஈட்டித்தரவேண்டும். அரசு மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடன், அரசுக்கு வட்டியை ஈட்டித்தரும் அதே போல அரசு நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு, கட்டிடம், சாலை என பல சொத்துகளை ஈட்டித்தரும்.

அரசின் செலவுகள் (முதல் கணக்கில்) வருமானத்தை ஈட்டிதரும் என்பதால் கடன் பெற்று செலவுகளை செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு பெரும் கடன்கள் அனைத்தும் முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும். பொதுவாக முதல் கணக்கில் பற்றாக்குறை இருக்காது. வருவாய் கணக்கில் பற்றாக்குறை இருந்தால் அதற்கும் சேர்த்து முதல் கணக்கில் கடன் பெறப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x