Published : 22 May 2017 09:58 AM
Last Updated : 22 May 2017 09:58 AM
சர்வதேச அளவில் முதல் 50 சொகுசு பிராண்ட்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த பட்டியலில் லூயிஸ் வுயிட்டன் (Louis Vuitton) பிராண்ட் முதல் இடத்தில் இருக்கிறது. கீதாஞ்சலி ஜெம்ஸ் 30-வது இடத்திலும், டைட்டன் 31-வது இடத்திலும், பிசி ஜூவல்லர் 44-வது இடத்திலும் இருக்கின்றன.
2014-15-ம் ஆண்டில் சர்வதேச அளவில் முதல் 100 இடங்களில் இருக்கும் சொகுசு பிராண்ட்களின் விற்பனையை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் 21,200 கோடி டாலர் அளவுக்கு ஆடம்பர பொருட்களின் விற்பனை நடந்திருக்கிறது.
டெலாய்ட் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் நடுத்தர பிரிவு மக்களின் எண்ணிக்கையும் அவர்களின் வருமானமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆடம்பர பொருட்களுக்கான தேவை இருக்கும். ஆடம்பர பொருட்களின் மீதான வரி அதிகமாக இருந்தாலும் கூட பிரிக்ஸ் மற்றும் ஆசியா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தேவை அதிகமாக இருக்கும்.
சீனா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரகம் ஆகிய நாடுகளில் அதிக வளர்ச்சி இருக்கும். இந்த நாடுகளில் 70% வாடிக்கை யாளர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் சொகுசு பொருட்களுக்காக அதிகம் செலவழித்ததாக தெரிவித்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT