Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

சோம் மித்தல் - இவரைத் தெரியுமா

$ ஐ.டி. துறையின் உயரிய அமைப்பான நாஸ்காமின் தலைவர். நாளை முதல் (ஜனவரி 3) இந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

$ இதற்கு முன்பு ஹியூலெட் பக்கார்ட், விப்ரோ, டிஜிட்டல் எக்யூப்மெண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்திருக்கிறார்.

$ கார்ப்பரேட் உலகில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவமும் ஐ.டி. துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுவமும் பெற்றவர்.

$ நாஸ்காம் தவிர, சி.ஐ.ஐ., நேஷனல் இ-கவர்னன்ஸ் பிளான் உள்ளிட்ட பல அமைப்புகளில் அங்கம் வகித்திருக்கிறார்.

$ ஐ.ஐ.டி பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், ஆகிய கல்வி நிலையங்களின் இயக்குநர் குழு மட்டுமல்லாமல் சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

$ கர்நாடக மாநிலத்தின் ஐ.டி. கொள்கையை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

$ ஐ.ஐ.டி. கான்பூர் மற்றும் ஐ.ஐ.எம். ஆமாதாபதில் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x