Published : 14 Feb 2014 12:24 PM
Last Updated : 14 Feb 2014 12:24 PM

திருப்திகரமாக இருக்கிறது: ராமமூர்த்தி - ஃபிக்கி ஒருங்கிணைப்பாளர்

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திருப்திகரமாகவே இந்த பட்ஜெட் வந்திருக்கிறது. சிமென்ட் துறைக்கு எப்படி, சிறு தொழில், நடுத்தர, பெரிய நிறுவனங்களுக்கு எப்படி, சாதகமாக அமைந்திருக்கிறது என்று பிரித்துப் பார்க்காமல் மொத்தமாக பார்க்கும் பட்சத்தில் இந்த பட்ஜெட் திருப்தியாக வந்திருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்களுக்கு அரசு கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது. கூடவே அனைத்து துறைகளின் கருத்துகளைக் கவனித்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஃபிக்கியின் எதிர்பார்ப்புகளையும் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பது பட்ஜெட்டில் தெரிகிறது.

நீண்ட கால நோக்கத்தில் மதுரவாயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டம் கொண்டுவரப்படுமானால், அது தொழில் துறையினருக்கு ஏற்றதாக இருந்திருக்கும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x