விமான டிக்கெட்: ரத்து செய்ய புதிய விதிகள்

விமான டிக்கெட்: ரத்து செய்ய புதிய விதிகள்
Updated on
1 min read

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பின்பு ரத்து செய்யும் பொழுது கூடுதல் கட்டணத்தை விமான நிறுவனங்கள் பிடித்தம் செய்து வருகின்றன. அதை தடுக்கும் வகையில் டிக்கெட் ரத்து செய்வதற்கு உண்டான புதிய விதிகள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

விமான நிறுவனங்கள் ரத்து செய்வதற்கான கட்டணம், அடிப் படை கட்டணம் மற்றும் எரி பொருள் கட்டணம் ஆகிய இரண்டை விட அதிகமாக இருக் கின்றன என்று விமான போக்கு வரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தற்போது வர உள்ள விதிகளில் விமான நிறுவனங்கள் கூடுதல் கட்ட ணத்தை பிடித்தம் செய்யாத அளவுக்கு விதிகளை விமான போக்குவரத்துத் துறை இயக்கு நரகம் உருவாக்கியுள்ளது.

இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தால் டிக்கெட் ரத்து செய்வ தற்கு அதிக கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது தடுக்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in