Published : 03 Jun 2016 09:56 AM
Last Updated : 03 Jun 2016 09:56 AM

ஏர்டெல் பேமென்ட் பேங்க் சிஇஓ சஷி அரோரா

ஏர்டெல் பேமென்ட் வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சஷி அரோரா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக நியமனம் செய்யப்பட்ட மணீஷ் கேரா வேறு தொழில் தொடங்க சென்றுவிட்டதால் அரோரா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் 26 வருடங்களாக எப்எம்சிஜி, டெலிகாம், மீடியா மற்றும் பேங்கிங் துறைகளில் அனுபவம் மிக்கவர் என்று பார்தி ஏர்டெல் குழுமத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி ரிசர்வ் வங்கி ஏர்டெல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பேமென்ட் வங்கியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

முன்னதாக அரோரா ஏர்டெல் மொபைல் தொழில் பிரிவின் சி.இஓ-வாக (பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி வட்டாரம்). அதற்கு முன்பாக கோடக் மஹிந்திரா வங்கியில் பணியாற்றியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x