Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM

ஹரிஷ் பட் - இவரைத் தெரியுமா?

$ டாடா குளோபல் பெவரேஜ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. பிட்ஸ் பிலானியில் எலெக்ட்ரிகல் என்ஜீனியரிங்கும், ஐ.ஐ.எம். ஆமதாபாதில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.

$ 1987-ம் ஆண்டு டாடா நிர்வாகப்பணியில் (Tata Administrative Service) சேர்ந்தார். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனும் இவரும் ஒன்றாக ஐ.ஐ.எம்.யில் படித்து, ஒன்றாக டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள்.

$ இவரது அப்பா வங்கி அதிகாரியாக இருந்ததால் மதுரையில் சில காலம் படித்திருக்கிறார்.

$ டைட்டன், டாடா டெலி சர்வீசஸ், டாடா காபி உள்ளிட்ட டாடா குழும நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

$ டைட்டன் நிறுவனத்தில் வேலை செய்யும் போது, 9 மாதங்கள் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு டாடா குழுமத்தில் இருந்த 120 பேரை நேர்காணல் செய்து, டாடா லாக் (Tata Log) என்று புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

$ அடுத்த புத்தகம் எப்போது என்று கேட்டதற்கு, இப்போதைக்கு முடியும் என்று நினைக்கவில்லை. இன்னும் நான்கு வருடங்களாவது ஆகும். ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 வார்த்தைகளை குறைந்தது நான்கு மாதங்களாவது எழுத வேண்டும். இது எளிதல்ல என்று சொல்லி இருக்கிறார்.

$ ஆனால் பிஸினஸ் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x