ஏற்றத்துடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை

ஏற்றத்துடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை
Updated on
1 min read

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 42.66 புள்ளிகள் உயர்ந்து 20,419.22 புள்ளிகளாகவும், நிப்டி 12.25 புள்ளிகள் உயர்ந்து 6,075.45 புள்ளிகளாகவும் இருந்தன.

ஆசிய பங்குச்சந்தையின் வர்த்தகத்தின் ஏற்றம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்திருந்தன.

கடந்த 4 வர்த்தக தினங்களில், சென்செக்ஸ் 167.30 புள்ளிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நியச் செலாவணிச் சந்தையில்,வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 62.10 என்ற நிலையில் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in