Published : 04 Mar 2014 10:46 AM
Last Updated : 04 Mar 2014 10:46 AM

சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை

பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை கடுமையான சரிவு காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 173 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 21 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழாக சரிந்து 29,946 புள்ளிகளாக நிலைபெற்றது. உக்ரைன், ரஷியா இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளதே பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60.18 புள்ளிகள் உயர்ந்து 21,006.83 புள்ளிகளாகவும், நிப்டி 16.40 புள்ளிகள் உயர்ந்து 6,237.85 புள்ளிகளாகவும் இருந்தது.

உலோகம், ஐ.டி, வங்கித் துறை பங்குகள் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்ததால் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது.

இருப்பினும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 62.15 என்ற நிலையில் இருந்தது. யூரோ, மற்ற சர்வதேச கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளதால் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாக அந்நியச் செலாவணிச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x