Published : 14 Feb 2014 11:03 AM
Last Updated : 14 Feb 2014 11:03 AM

பங்குச்சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு

இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 76.80 புள்ளிகள் உயர்ந்து 20,270.15 புள்ளிகளாகவும், நிப்டி 19.90 புள்ளிகள் உயர்ந்து 6,021 புள்ளிகளாகவும் இருந்தது.

தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் வர்த்தகம் ஏற்றத்தில் இருப்பதால் பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அந்நியச் செலாவணிச் சந்தையிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 62.28 ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு உயர்வுக்கு, சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு குறைந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x