Last Updated : 07 Feb, 2017 10:15 AM

 

Published : 07 Feb 2017 10:15 AM
Last Updated : 07 Feb 2017 10:15 AM

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்க ஆப்டிமஸ் நிறுவனத்துடன் பிளாக்பெர்ரி ஒப்பந்தம்

கனடாவைச் சேர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்க டெல்லியைச் சேர்ந்த ஆப்டிமஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டிராய்டு தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை ஆப்டிமஸ் நிறுவனம் தயாரிக்க லைசென்ஸை பெறும். அத்துடன் இத்தயாரிப்புகளை இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் இது வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு சாஃப்ட்வேருக்கான உரிமை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகியவை பிளாக்பெர்ரி வசமே இருக்கும்.

இரு நிறுவனங்களும் இணைந்து வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை, விளம்பரம், விற்பனைக்குப் பிந்தைய சேவை உள்ளிட்டவைகளை மேற்கொள் ளும்.

தயாரிப்பில் அனுபவம், விற்பனைக்கு மிகச் சிறந்த டீலர் நெட்வொர்க், ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் நிறுவ னத்தை தங்களது பங்குதாரராக ஏற்றுக் கொண்டதாக பிளாக் பெர்ரி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மூத்த துணைத் தலைவர் அலெக்ஸ் துர்பெர் தெரிவித்தார்.

செல்போன் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்குப் பிந்தைய சேவை உள்ளிட்ட வற்றில் பிளாக்பெர்ரியுடனான இணைப்பு வெற்றிகரமானதாக இருக்கும் என்று ஆப்டிமஸ் நிறுவனத் தலைவர் அசோக் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x