Published : 14 Jan 2014 11:56 AM
Last Updated : 14 Jan 2014 11:56 AM

ஐரோப்பிய நிறுவனம் முதலீடு

ஐரோப்பாவில் நிதி மேலாண் நிறுவனமான காம்ஜெஸ்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள நான்கு நிறுவனங்களின் பங்குகளை வெளிச் சந்தையில் வாங்கியது. மொத்தம் 26.58 லட்சம் பங்குகளை இந்நிறுவனம் வாங்கியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 57 கோடியாகும்.

டாடா மோட்டார்ஸ், கெயில் இந்தியா, பார்தி இன்பிராடெல் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகளை இந்நிறுவனம் வாங்கியுள்ளது. ஆசியாவைச் சேர்ந்த டிபி இண்டர்நேஷனரல் லிமிடெட் மூலம் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. கெயில் இந்தியா நிறுவன பங்குகளை மட்டும் டாயிஷ் செக்யூரிட்டீஸ் மொரீஷியஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 6.61 லட்சம் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 370.50 என்ற விலையில் ரூ. 24.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x