Published : 14 Oct 2014 01:15 PM
Last Updated : 14 Oct 2014 01:15 PM

மொத்த விலைக் குறியீட்டு எண் 2.38 சதவீதமாகக் குறைந்தது

நாட்டின் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந் திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாத மொத்த விலைக் குறியீட்டு எண் 2.38 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது 3.74 சதவீதமாக இருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள் விலை குறைந்ததன் காரணமாக பணவீக்கம் குறைந்திருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மொத்த விலைக் குறியீட்டு எண் 2.4 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு பணவீக்கம் இந்த அளவுக்கு குறைவது இதுதான் முதல் முறை.

கடந்த வருடம் இதே செப்டம்பர் மாதத்தில் மொத்த விலைக் குறியீடு எண் 7.05 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் மாத நுகர்வோர் பணவீக்கம் 6.46 சதவீதமாக இருந்தது. இந்த தகவல் திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. கடந்த வருடம் இதே காலத்தில் இது 9.84 சதவீதமாக இருந்தது. 2012-க்கு பிறகு நுகர்வோர் பணவீக்கம் இப்போதுதான் குறைந்திருக்கிறது.

சில்லரை மற்றும் மொத்த விலைக் குறியீட்டு எண் குறைந்திருப்பது, பணவீக்க அழுத் ததில் இருந்து சிறிது விடுபட்டி ருக்கிறோம். சர்வதேச அளவில் முக்கிய பொருள்களின் விலை குறைவது, ரூபாயின் மதிப்பு ஒரு எல்லைக்குள் வர்த்தகமாவது ஆகியவற்றை பார்க்கும்போது, பணவீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த இலக்கை எட்டிவிடலாம்.

இதன் மூலம் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஃபிக்கி அமைப்பின் செயலர் திதார் சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜீ கூறும்போது பணவீக்கம் குறைந்திருப்பது வரவேற்கத்தகுந்தது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்திருப்பது, சாதமான பருவமழை மற்றும் அரசின் நடவடிக்கைகள் மூலம் விலை உயர்வைக் குறைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x