Last Updated : 13 Mar, 2017 09:49 AM

 

Published : 13 Mar 2017 09:49 AM
Last Updated : 13 Mar 2017 09:49 AM

பணமதிப்பு நீக்கத்தால் பிஸ்கட் தயாரிப்பு துறையில் ரூ.700 கோடி இழப்பு

பணமதிப்பு நீக்கத்தால் பிஸ்கட் துறையில் ரூ.700 கோடிக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகும் கிராமப்புறங்களில் பிஸ்கட் விற் பனை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிஸ்கட் தயாரிப் பாளர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவர் மயாங் ஷா கூறியதா வது: பணமதிப்பு நீக்கம் அறிவிக் கப்பட்ட பின் ஏற்பட்ட பணத் தட்டுப் பாட்டால் பிஸ்கட் துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியது. பணமதிப்பு நீக்கத்தால் கிட்டத்தட்ட ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு நகர்புறங்களில் நிலைமை சீரடைந்துள்ளது. ஆனால் கிராமப் புறங்களில் விற்பனை இன்னும் மீளவில்லை. கிராமப்புறங்களில் விற்பனை பழைய நிலைக்கு வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

பிஸ்கட் துறை தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்து வருகிறது. குறைந்த விலையிலான குளுக்கோஸ் மற்றும் பிற பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

குறைந்த விலையிலான குளுக்கோஸ், பால், மேரி பிஸ் கட்ஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் 240க்கும் மேற்பட்ட பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மூட வேண்டி வரும் என்று தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைந்த விலையிலான பிஸ்கட்ஸ் ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கு குறைவாகவும் குறைந்த லாப சதவீதத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்த பொருட்களுக்கு மத்திய கலால் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

``தற்போது பிஸ்கட் மீது 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைத்திருப்பது அநீதியாகும்’’ என்று ஷா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி மொத்த பிஸ்கட் விற்பனையில் 40 சதவீதம் குறைந்த விலையிலான பிஸ்கட்டுகளே விற்பனையாகி வருகின்றன. இந்தப் பிஸ்கட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டுவந்தால் விற்பனை 20-25 சதவீதமாக குறைந்துவிடும்.

பிஸ்கட் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தில் 50 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த துறையின் மதிப்பு ரூ.37,500 கோடியாக இருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x