Last Updated : 29 Jan, 2017 11:25 AM

 

Published : 29 Jan 2017 11:25 AM
Last Updated : 29 Jan 2017 11:25 AM

ஜிஏஏஆர் குறித்த விளக்கம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: அசோசேம் செயலர் டி.எஸ். ராவத் தகவல்

பொது தடுப்பு விதி (ஜிஏஏஆர்) குறித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் (சிபிடிடி) அளித்துள்ள விளக்கத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தொழிற் கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.

ஜிஏஏஆர் விதிமுறைகள் ஏப்ரல் 2017 முதல்தான் அமலுக்கு வரும் என்று சிபிடிடி சமீபத்தில் விளக்கம் அளித்தது. இந்த அறிவிப்பானது மிகவும் முக்கியமான அறிவிப்பாகும். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் அகன்றுள்ளது என்றும் அசோசேம் தெரிவித்துள்ளது.

ஜிஏஏஆர் இந்த நிதி ஆண்டிலேயே விதிக்கப்படுமோ என்ற அச்சம் தற்போது விலகியுள்ளது என்று அசோசேம் செயலர் டி.எஸ். ராவத் தெரிவித்துள்ளார். ஜிஏஏஆர் குறித்து இதுவரை எழுந்த யூகங்களுக்கு இதனால் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் மூலம் முதலீட்டாளர்கள் நலன் காக்கப்பட்டுள்ளதோடு வரித்துறையில் உள்ள இள நிலை அதிகாரிகளுக்கும் இது தொடர்பான தெளிவு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிஏஏஆர் குறித்து முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் பேசிய. அவர், முதலீட்டாளர்கள் எத்தகைய முதலீட்டை மேற்கொள்வது என தேர்வு செய்வது அவர்களது உரிமை என்று இதில் எவ்வித நிர்பந்தமும் கிடையாது. வரி அல்லாத வர்த்தக இனங்களைத் தேர்வு செய்தால் அது ஜிஏஏஆர் விதியின் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜிஏஏஆர் என்பது, நிறுவனங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனையில் பிற நாடுகளில் விதிக்கப்படும் வரியைத் தவிர்க்கப் பயன்படுவதாகும். இத்தகைய வரி விதிப்பை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு மேற்கொள்ளலாம்.

ஜிஏஏஆர் குறித்து அரசு அளித்துள்ள விவரம் மற்றும் இது எத்தகைய சந்தர்ப்பத்தில் விதிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளதோடு வரி விதிப்பு மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று ராவத் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x