Published : 04 Jan 2017 10:27 AM
Last Updated : 04 Jan 2017 10:27 AM

பிஎஸ்இ ஐபிஓ வெளியிட ‘செபி’ அனுமதி: ரூ.1,500 கோடி நிதி திரட்ட திட்டம்

ஆசியாவின் மிகப்பழமையான பங்குச்சந்தை அமைப்பான பிஎஸ்இ பொதுப்பங்கு வெளியிட (ஐபிஒ) பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓ விரைவில் வெளியாக இருக்கிறது. ஓஎப்எஸ் முறையில் 30 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள பிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் ஹோல்டிங்ஸ் இன் வெஸ்ட்மென்ட், கால்ட்வெல் இந்தியா ஹோல்டிங்ஸ், அகாசியா பான்யன் பார்ட்னர்ஸ், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச், ஜார்ஜ் சோரசிஸ் குவாண்டம் பண்ட் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் இந்த ஐபிஓ மூலம் வெளியேறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் ஐபிஓ வெளியிடுவதற்கு பிஎஸ்இ விண்ணப்பித்தது. இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

பிஎஸ்இ-யில் 9,000 பங்குதாரர் கள் இருக்கிறார்கள். ஆரம்ப கட்டத் தில் பங்கு தரகர்கள் பெரும்பா லான பங்குகளை வைத்திருந்த னர். அதன்பிறகு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட் டாளர்கள் அந்த பங்குகளை வாங்கினார்கள்.

`செபி’ விதிமுறைகளின்படி, பிஎஸ்இ நிறுவனத்தை தன் னுடைய எக்ஸ்சேஞ்சிலேயே பட்டியலிட முடியாது. அதனால் என்எஸ்இயில் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எடெல்வைஸ் பைனான்ஸியல் சர்வீசஸ், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் மற்றும் எஸ்எம்சி கேபிடல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஐபிஓவைக் கையாளுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x