Published : 28 Jan 2017 10:12 AM
Last Updated : 28 Jan 2017 10:12 AM

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் அரசின் வருவாய் அதிகரிக்கும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற சிஐஐ மாநாட்டில் கலந்து கொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் உண்டான சிக்கல்களை மத்திய அரசு மாநில அரசுகள் தீர்த்து வருகிறது. இந்த புதிய வரி அமைப்பு நடைமுறைப்படுத்தவதற்கான இறுதி நிலையை எட்டியுள்ளது. பண மதிப்பு நீக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி அமல்படுத்த இருப்ப தால் மத்திய மற்றும் மாநில அரசு களுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். மேலும் முறைப் படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் அளவு அதிகமாகும்.

இந்தியா வரி பிடித்தம் தொடர் பாக அதிக புகார்கள் கொண்ட சமூகத்தை கொண்டிருக்கிறது. வரி அமைப்பு வரி ஏய்ப்பவர்களுக்கு சாதகமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் வருவாயை வைத்துக் கொண்டு இந்த அமைப்பை செயல்படுத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத்தான் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் நீக்கம் செய்யப்பட்டன. இது கொஞ்ச காலத்துக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த பணமதிப்பு நீக்கம் மூலம் கறுப்புப் பொருளாதாரம், முறையற்ற பொருளாதாரம் ஆகியவை நீங்கி முறையான பொருளாதாரமாக மாறும். மேலும் வங்கி அமைப்பு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால் முறையான பொருளாதாரத்தின் அளவு அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப் படுவதால் இந்தியா முழுவதும் ஒரே சந்தையாக இருக்கும். பல்வேறு மதிப்பீடுகள் நீக்கப்பட்டு வரி அமைப்புக்கு அதிக வருவாய் வரும். மாநில அரசுகள் அனைத்தும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. தற்போது இறுதி நிலையை எட்டியிருக்கிறது.

இவ்வாறு நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x