Last Updated : 25 Feb, 2017 10:25 AM

 

Published : 25 Feb 2017 10:25 AM
Last Updated : 25 Feb 2017 10:25 AM

சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டாலும் இந்தியாவில் பெரிய பாதிப்பு இருக்காது: ஐஎம்எப் அதிகாரி கருத்து

இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக ஐஎம்எப் (சர்வதேச செலாவணி நிதியம்) உயர் அதிகாரி பால் ஏ கேஷின் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதாரத்தில் மேலும் ஒரு சரிவு ஏற்பட்டாலும் வளர்கின்ற பொருளாதார நாடுகளில் இந்தியா மிக குறைந்த அளவுக்கே பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐஎம்எப்-ன் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் துணை இயக்குநரும் மற்றும் இந்தியாவின் தலைவருமான பால் ஏ கேஷின் மேலும் கூறியதாவது: உலகப் பொருளாதாரத்தின் சமீபத்திய வளர்ச்சி விகிதம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து ஒரு சரிவு அல்லது நிலைகுலைவு ஏற்பட்டால் இந்தியா முற்றிலும் பாதிக்கப்படாது என்று சொல்ல முடியாது. ஆனால் மற்ற நாடுகளை விட குறைவான பாதிப்பு ஏற்படும்.

பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன் இந்தியாவில் நுகர்வுச் செலவு மிக ஆரோக்கியமாக இருந்தது. இது பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி கொண்டுச் சென்றது. இந்தியா உள்நாட்டு தேவையை சார்ந்து இயங்க கூடிய பொருளாதாரமாக உள்ளது. சர்வதேச பொருளாதார குறியீடுகள் சிறப்பாக இல்லையென்றாலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாகவே அடுத்து சர்வதேச பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டால் இந்தியா குறைந்த அளவு பாதிக்கப்படும் என்று கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்தியாவைப் பற்றிய வருடாந்திர அறிக்கையில் 2016-17-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக குறுகிய கால பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் பணமதிப்பு நீக்கத்தால் குறுகிய கால பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். நீண்ட கால அடிப்படையில் நல்ல வளர்ச்சியை தரும். அடுத்த சில வருடங்களில் 8 சதவீத வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து கேஷின் கூறுகையில். `` கடந்த சில வருடங்களில் இந்தியாவின் செயல்பாட்டை வைத்து ஐஎம்எப் வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x