Published : 21 Mar 2014 11:36 AM
Last Updated : 21 Mar 2014 11:36 AM

கடன் பத்திரம்: கனரா வங்கி திட்டம்

கனரா வங்கி கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.1,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. வங்கியின் முதலீட்டு அளவை அதிகரித்துக் கொள்வதற்காக இந்த நிதி திரட்டப்படுகிறது. பேசல் – 3 விதிமுறைப்படி நிதி அளவை அதிகரித்துக் கொள்வதற்காக இரண்டாம் நிலை கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் கனரா வங்கியின் பங்கு விலை 2.76 சதவீதம் சரிந்து ரூ. 239.35-க்கு விற்பனையானது. கடந்த ஜனவரி மாதம் வங்கி ரூ. 1,500 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டது. பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு மத்திய அரசு முதலீட்டு அதிகரிப்புக்கு ரூ. 500 கோடி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டு அளவை அதிகரிக்க மத்திய அரசு ரூ. 14 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. அதில் ஒரு பகுதியாக ரூ. 500 கோடி கனரா வங்கிக்கு ஒதுக்கப்பட்டது. அடுத்த நிதி ஆண்டில் வங்கிகளுக்கு ரூ. 11,200 கோடி நிதி ஒதுக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x