Published : 31 Oct 2014 10:34 AM
Last Updated : 31 Oct 2014 10:34 AM

புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள்

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 27358 புள்ளியைத் தொட்டது. கடந்த செப்டம்பர் மாதம் (8-ம் தேதி) 27354 புள்ளிகள்தான் இதுவரை உச்சபட்ச புள்ளியாக இருந்தது.

வர்த்தகத்தின் இடையே 248 புள்ளிகள் உயர்ந்து 27346 புள்ளியில் சென்செக்ஸ் முடிவடைந்தது. இதேபோல வர்த்தகத்தின் இடையே நிப்டி உயர்ந்து புதிய உச்சமான 8181 புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் இடையே 78 புள்ளிகள் உயர்ந்து 8169 புள்ளியில் முடிவடைந்தது.

அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஊக்க நடவடிக்கைகளை நிறுத்துவது என்று முடிவு செய்திருக்கிறது. ஆனால் அதேசமயம் இப்போது இருக்கும் வட்டி விகிதங்களை தொடர்வது என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த ஊக்க நடவடிக்கைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதே சமயம் ஜப்பான், ஐரோப்பா ஆகிய மத்திய வங்கிகளில் ஊக்க நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. அதனால் இந்திய சந்தைக்கு முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த முதலீடுகள் மற்றும் மத்திய அரசு எடுத்துவரும் சீர்திருத்தங்கள் ஆகியவை காரணமாக இந்திய சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

குறிப்பாக ரியால்டி துறையில் அந்நிய முதலீடு சம்பந்தமாக புதன் கிழமை அரசு சில முடிவுகளை அறிவித்தது. இதன் காரணமாக குறிப்பாக ரியால்டி துறை குறியீடு 3.44 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. மேலும் அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. இதற்கடுத்து ஐடி துறை குறியீடு 2.04 சதவீதமும், டெக்னாலஜி குறியீடு 1.77 சதவீதமும், ஆயில் அண்ட் கேஸ் குறியீடு 1.65 சதவீதமும் உயர்ந்து முடிந்தது.

மிட்கேப் குறியீடு 0.58 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.34 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹிண்டால்கோ, இன்போசிஸ் மற்றும் கெயில் ஆகிய பங்குகள் உயர்ந்தும், சேசா ஸ்டெர்லைட், எம் அண்ட் எம், சிப்லா, டாடா பவர் மற்றும் ஹிரோமோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.

பி-நோட் முதலீடு அதிகரிப்பு

செப்டம்பர் மாத பி-நோட் முதலீடு (பதிவு செய்யப்பட்ட அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மூலமாக வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவை செய்யும் முதலீடு பி-நோட் முதலீடு ஆகும்)கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து முதலீடு 2.22 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x