Published : 11 Jan 2017 10:28 AM
Last Updated : 11 Jan 2017 10:28 AM

இவரைத் தெரியுமா?- கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு நிறுவனத்தின் டிசைன் மற்றும் வகைகள் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.

2014- ஆண்டு முதல் டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இ-பே நிறுவனத்தின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான நிதி திட்டம் மற்றும் பகுப்பாய்வு இயக்குநர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ப்ராக்டர் அண்ட் கேம்பள், சன்ஷைன் டீ ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் உள்ள ஏசியன் மேலாண்மையியல் கல்வி மையம் மற்றும் அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள யுஐயுசி மையங்களில் நிர்வாகவியலில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x