Published : 15 Mar 2017 11:14 AM
Last Updated : 15 Mar 2017 11:14 AM

ஐஐஎம் அகமதாபாத் வளாகத் தேர்வு: 18 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது அமேசான்

ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் 18 மாணவர்களுக்கு அமேசான் வேலை வழங்கி இருக்கிறது. வளாகத் தேர்வில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதியவை ஆகும். அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து மெக்கென்ஸி (15) கோல்ட்மேன் சாக்ஸ் (9) ஹிந்துஸ்தான் யூனிலிவர் (7), புராடக்டர் அண்ட் கேம்பிள், எஸ்சி ஜான்சன் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் தலா 6 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

பொது நிர்வாக பிரிவில் டாடா மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் 10 வேலை வாய்ப்புகளை வழங்கியது. இதே பிரிவில் சி.கே.பிர்லா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கலந்துகொண்டன. இவர்கள் தவிர வங்கி மற்றும் நிதிச்சேவை பிரிவில் சிட்டி பேங்க், கிரெடிட் சூஸ், டாய்ஷ் பேங்க், கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மார்கன், ஸ்டாண்டர்டு சார்ட் டர்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், புல்லர்டன், ஆர்பிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வளாகத் தேர்வில் கலந்துகொண்டன.

விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவில் ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்யூஎல், ஐடிசி, நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

தொழில்முனைவு திட்டத்தில் ஏழு மாணவர்கள் இருப்பதால், அவர்கள் வளாகத்தேர்வில் கலந்து கொள்ளவில்லை என ஐஐஎம் அகமதாபாத் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x