Last Updated : 12 Sep, 2016 10:18 AM

 

Published : 12 Sep 2016 10:18 AM
Last Updated : 12 Sep 2016 10:18 AM

செப்டம்பரில் 3 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு ரூ.7,000 கோடி திரட்ட திட்டம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், மற்றும் ஜிஎன்ஏ ஆக்ஸெல்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் ஐபிஓ இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்த மூன்று நிறுவனங் களும் ரூ.7,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளன.

இதில் எல் அண்ட் டி டெக் னாலஜீஸ் நிறுவனத்தின் ஐபிஓ இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஐபிஓ வரும் புதன் கிழமை (செப் 14) முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.850 முதல் ரூ.860 என நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. ஐபிஓ மூலம் ரூ.894 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஜிஎன்ஏ ஆக்ஸெல்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வரும் புதன் கிழமை தொடங்கி செப்டம்பர் 16-ம் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் விலையாக ரூ.205-207 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.130 கோடி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தின் ஐபிஓ செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் விலையாக ரூ.300 முதல் ரூ.334 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அதிகபட்சமாக ரூ.6,047 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x