Published : 23 Nov 2013 11:59 AM
Last Updated : 23 Nov 2013 11:59 AM

திலிப் சங்வி - இவரைத் தெரியுமா?

# சன்பார்மா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.

# கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் படித்த இவர், 1982-ம் ஆண்டு சன் பார்மா நிறுவனத்தை ஆரம்பித்தார்.

# 1997-ம் ஆண்டு முதல் இதுவரை 13 நிறுவனங்களை இவர் கையகப்படுத்தி இருக்கிறார்.

# சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் இவர்தான். (முகேஷ் அம்பானி, லஷ்மி மிட்டலுக்கு அடுத்து).

# 2009-ம் ஆண்டு வெளியான போர்ப்ஸ் அறிக்கையில் இவர் 14 -இடத்தில் இருந்தார்

# சமீபத்தில் ரூபாய் மதிப்பு சரிந்ததில் அதிக லாபம் அடைந்தது இவர்தான். ரூபாய் மதிப்பு சரிந்ததால் மட்டும் இந்த வருடத்தில் 470 கோடி டாலர் அளவுக்கு இவரது சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது.

# கடந்த ஐந்து வருடத்தில் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் லாபம் கொடுக்கவில்லை. ஆனால் இவரது சன்பார்மா நிறுவனம் 426 சதவிகிதம் லாபம் கொடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x