Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

ரிலையன்ஸ், ஏர்டெல் கூட்டு ஒப்பந்தம்

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனமும், சுநீல் பார்தி மிட்டலுக்குச் சொந்தமான ஏர்டெல் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளன.

இதன்படி இரு நிறுவனங்களும் தொலைத் தொடர்பு கட்டமைப்பு சேவைகளை பகிர்ந்து பயன்படுத்திக் கொள்ள உள்ளன. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கட்டமைப்பு வசதிகள், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான செலவு பாதியாகக் குறையும்.

கண்ணாடியிழை கேபிள் (ஆப்டிக் ஃபைபர்), நகரங்களிடையிலான ஒருங்கிணைப்பு, நீர்மூழ்கி கேபிள் இணைப்பு, செல்போன் டவர், இன்டர்நெட் பிராட்பேண்ட் ஆகியவற்றை இரு நிறுவனங்ளும் பயன்படுத்திக் கொள்ளும். எதிர்காலத்தில் இத்துறையில் ஏற்படும் வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. பரஸ்பரம் இரு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் 2ஜி, 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகளை அளிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x