

பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவன முதலீட் டாளர்களிடம் எஸ்பிஐ தெரிவித் துள்ளது. ரூ.15,000 கோடி மதிப் புள்ள பங்குகளை விற்பதற்கான நிறுவன முதலீட்டாளர்கள் சந்திப்பில் எஸ்பிஐ இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறது.
பணமதிப்பு நீக்க முடிவால் நிலையில்லாத் தன்மை ஏற்பட் டுள்ளது. வங்கித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக முதலீட்டாளர்களிடம் விளக்கி யுள்ளது. மேலும் பணமதிப்பு நீக்கத்தால் தொடர்ந்து இந்திய பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இதனால் வங்கித் துறை கடுமையாக பாதிக்கப் படலாம் எனவும் கூறியுள்ளது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிகளில் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு டெபாசிட் விகிதம் (காசா விகிதம்) அதிகரித்துள்ளது. காசா விகிதம் 4 சதவீதம் உயர்ந்து 39.30 சதவீதமாக (பிப்ரவரி 17,2017 வரை) இருக்கிறது. இதனால் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைத்துவிட்டன.
இதன் காரணமாக வங்கிகள் மற்றும் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு மற்றும் இதர வருமானம் கடுமையாக பாதிக்கப்படலாம். போட்டி அதிகரிப்பதால் தவறுகள் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.