Published : 24 Mar 2014 02:30 PM
Last Updated : 24 Mar 2014 02:30 PM

சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பு : மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து வெளியான அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்மொழிதலின் பெயரிலேயே மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதாக அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x