Published : 12 Apr 2017 10:11 AM
Last Updated : 12 Apr 2017 10:11 AM

மியூச்சுவல் பண்ட்களில் ரூ.3.43 லட்சம் கோடி முதலீடு

முதலீட்டாளர்கள் கடந்த நிதி ஆண்டில் ரூ.3.43 லட்சம் கோடியை மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்திருக்கின்றனர். பெருமளவு தொகை இன்கம் பண்ட் மற்றும் லிக்விட் பண்ட்களுக்கு சென்றுள்ளது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.1.34 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு வந்தது.

1990-2000 ஆண்டுகளில் இருந்து மியூச்சுவல் பண்ட்களில் எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது என்னும் தகவலை இந்திய மியூச் சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கம் (ஆம்பி) வைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த நிதி ஆண்டில் மியூச் சுவல் பண்ட்களில் முதலீடு உயர்ந்திருக்கிறது.

சிறு முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர். 1.30 கோடி வாடிக்கையாளர்கள் மாதாந்திர அடிப்படையில் (எஸ்ஐபி) தொடர்ந்து முதலீடு செய்வதன் காரணமாக மியூச்சுவல் பண்ட் களில் முதலீடு உயர்ந்திருப்பதாக பஜாஜ் கேபிடல் குழும இயக்குநர் அனில் சோப்ரா தெரிவித்தார்.

டெபாசிட்களில் வட்டி விகிதம் குறைந்திருப்பதால் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு உயர்ந்திருப்பதாக ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் காந்த் மீனாட்சி கூறினார்.

இன்கம் பண்ட்களில் அதிக முதலீடு வந்திருக்கிறது. இந்த பண்ட்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் மாதாந்திர மற்றும் காலாண்டு அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த வகை பண்ட் களில் ரூ.1.22 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது. அதே போல லிக்விட் பண்ட்களில் ரூ.95,826 கோடி முதலீடு வந்திருக் கிறது. பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் ரூ.70,000 கோடி முதலீடு வந்துள்ளது. மார்ச் 31 வரை யிலான காலத்தில் 41 மியூச்சு வல் பண்ட் நிறுவனங்கள் ரூ.18.30 லட்சம் கோடியை கையாளு கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x