Published : 09 Jan 2014 09:39 AM
Last Updated : 09 Jan 2014 09:39 AM

கட்டமைப்புத் துறையில் முதலீடு: தென் கொரியாவுக்கு சிதம்பரம் அழைப்பு

இந்தியாவில் கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று தென்கொரிய நிதி அமைச்சர் ஹியுன் ஓ சியோக்கை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை தென்கொரிய நிதி அமைச்சர் தலைமையிலான குழு புதன்கிழமை சந்தித்தது. அப்போது பேசிய சிதம்பரம், இந்தியாவில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக தாராளமயக் கொள்கை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை, வங்கித்துறையில் சீர்திருத்தம், நிதித்துறையில் சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.புது டெல்லி வந்துள்ள தென் கொரிய நிதி அமைச்சர் ஹியுன் ஓ சியோக்கை வரவேற்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x