Published : 07 Apr 2017 11:32 AM
Last Updated : 07 Apr 2017 11:32 AM

ஆன்லைன் முதலீட்டு ஆலோசனை ஜியோஜித் அறிமுகம்

முதலீட்டு சேவை நிறுவனமான ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் ஆன்லைன் மூலம் முதலீட்டு ஆலோசனை களை வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் ஹெச்டிஎப்சி அசெட் மேனஜ்மெண்ட் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் மிலிந்த் பார்வே, இந்த சேவையை அறி முகப்படுத்தி பேசியதாவது: வளர்ந்த நாடுகளை விட இந்தியர் களிடம் சேமிக்கும் பழக்கம் அதிகம்.

வங்கியில் சேமிப்பது, தங்க நகைகளை வாங்குவது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என முதலீடு பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஆனால் முதலீட்டு வடிவம் தற்போது மாறியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் என்ன இலக்குகளுக்காக முதலீடு செய்கிறோம் என்பதை அறியாமல் முதலீடு செய்துவருகிறார்கள். இலக்கு நோக்கிய முதலீடு களை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.பி.குரியன், ஜியோஜித் நிறுவனத்தின் பொறுப்புகள் அல்லாத இயக்குநர் ஆர்.பூபத், ஜியோஜித் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சதீஷ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x