Published : 28 Jun 2017 10:28 AM
Last Updated : 28 Jun 2017 10:28 AM
தொழில்நுட்பம் உலகில் மிகப் பெரிய மாற்றங்களைக்கொண்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் அரசுகள் கவனக்குறைவாக இருந்தால் சமூகத்தில் மிகப் பெரிய அளவுக்கு ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும் என்று தொழில்துறை வல்லுநர்கள் எச்சரித்தனர்.
சீனாவில் உள்ள டாலியன் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் இக்கருத்தை பலரும் பதிவு செய்துள்ளனர். கோடைக்கால டாவோஸ் என்றழைக்கப்படும் இந்த பொருளாதார மாநாட்டில் தொழில்நுட்பம், அறிவியல், புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கப்படும். ஸ்விட்சர்லாந் தில் நடைபெறும் மாநாட்டின் நீட்சியாக இது நடைபெறுகிறது. இதில் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா, தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கு முக்கிய அடிப்படை கல்விதான். இது அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பம் இப்போது பரவலாக அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்படுகிறது. இதை புரிந்து கொள்ள மிகவும் தேவையானது கல்விதான். வேலை வாய்ப்பை அளிப்பதும் கல்விதான். ரோபோட்டை உருவாக்குவதால் வேலை பலருக்கு போகும் என்பதை விட அதை உருவாக்குவதில் பலருக்கு வேலை கிடைக்கும் என்று குறிப் பிட்டார்.
தற்போது நிகழும் மாற்றங் களில் எவரும் விடுபட்டு போய்விடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT