Published : 15 Sep 2016 11:03 AM
Last Updated : 15 Sep 2016 11:03 AM

`கண்டுபிடிப்பு துறையில் இந்தியா- இங்கிலாந்து இணைந்து செயல்பட வேண்டும்’

கண்டுபிடிப்பு துறையில் இந்தியா - இங்கிலாந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று இங்கிலாந்து துணை தூதரக அதிகாரி பரத் ஜோஷி தெரிவித்துள்ளார். தொழில் துறையில் உயிரிதொழில்நுட்பம் என்ற தலைப்பில் நேற்று சென்னை யில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை இங்கிலாந்து அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு மையம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த துணை தூதரக அதிகாரி பரத் ஜோஷி கூறியது: இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் வாய்ப்புகளை பரிமாறிக் கொள்ளவேண்டும். மேலும் கண்டுபிடிப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இங்கிலாந்து ஆராய்ச்சி பிரிவில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த வாய்ப்புகளை இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பரத் ஜோஷி தெரிவித்தார்.

இங்கிலாந்து அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு மையம் 29 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவில் 47 நகரங்களில் இந்த மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x