Last Updated : 06 Jan, 2017 10:15 AM

 

Published : 06 Jan 2017 10:15 AM
Last Updated : 06 Jan 2017 10:15 AM

பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் ஊதியங்களில் மாற்றம் செய்ய வங்கி வாரிய குழு பரிசீலனை

பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் ஊதியங்களில் மாற்றம் கொண்டு வர வங்கி வாரியக் குழு பரிசீலனை செய்வதாக அதன் தலைவர் வினோத் ராய் தெரிவித்திருக்கிறார்.

அசோசேம் அமைப்பின் 97- வது ஆண்டு விழாவில் பேசிய வர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை கவர்வதற்காக சம்பள விகிதங்களில் மாற்றம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் இந்த மாற்றம் நிலை யான சம்பள உயர்வாக இருக் காது. செயல்பாடுகளின் அடிப் படையிலே இந்த மாற்றங்கள் இருக்கும். அடுத்த நிதி ஆண்டு முதல் அமல்படுத்த திட்டமிட் டிருக்கிறோம். இதன் மூலம் சந்தை யில் இருந்து திறமைவாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு உருவாகும்.

செயல்பாடுகள் அடிப்படையி லான மாற்றம் நிர்வாக அதிகாரி களுக்கு மட்டுமல்லாமல், நடுத் தர மற்றும் ஆரம்ப நிலை பணி யாளர்களுக்கும் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களில் நேர்மை, வெளிப் படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இதன் காரண மாக வளர்ச்சி மற்றும் முதலீட் டாளர்களின் ஆர்வம் குறைகிறது. இதன் காரணமாக அரசாங்கம் நலத்திட்ட உதவிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் இருக்கிறது.

வெளிப்படைத்தன்மை உருவாக்க பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு ஆறு ஆண்டுகள் பதவி வழங்க திட்ட மிட்டிருக்கிறோம். தற்போது 15 முதல் 18 மாதங்கள் இருப்பதால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x