Published : 13 Sep 2014 10:55 AM
Last Updated : 13 Sep 2014 10:55 AM
எல்ஐசி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (எல்ஐசி ஹெச்எப்எல்) நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 33 ஆயிரம் கோடி கடன்வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்தகவலை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுனிதா சர்மா தெரிவித்தார்.
எல்.ஐ.சி ஹெச்எப்எல் சார்பில் உங்கள் இல்லம்’14 என்னும் கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இம்மாதம் 14-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவது மற்றும் அது தொடர்பான கடன் வழங்கும் சாத்தியங்கள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன. சென்னையில் 17-வது ஆண்டாக நடக்கும் இந்த மூன்று நாள் கண்காட்சியை சுனிதா சர்மா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் நடக்கும் இந்த வீட்டு கண்காட்சியில் 90-க்கும் மேற்பட்ட வீடு கட்டுமானம் மற்றும் விற்பனை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பொதுமக்கள் இந்த கண்காட்சியில் தேர்வு செய்யும் வீடுகளுக்கு உடனடி கடன் வழங்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எல்ஐசி ஹெச்.எப்.எல் நிறுவனம் குறைந்த வட்டித் தொகையில் வீட்டுக்கடன்களை வழங்கி வருகிறது. கடந்த நிதியாண்டின் எங்கள் மையத்தின் வளர்ச்சி 18% உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 25ஆயிரம் கோடி கடன் வழங்கிய நிலையில் இந்தாண்டு 33 ஆயிரம்கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT