Published : 13 Sep 2014 10:50 AM
Last Updated : 13 Sep 2014 10:50 AM

ஸ்நோமென் லாஜிஸ்டிக்ஸ்: முதல் நாளில் 67% உயர்வு

ஸ்நோமென் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை முதல் முறையாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இந்நிறுவனப் பங்கு, பங்குச் சந்தையில் 67 சதவீதம் உயர்ந்து 78.75 ரூபாயில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 69.79 சதவீதம் உயர்ந்து 79.80 ரூபாயில் முடிவடைந்தது.

புதிய பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்களுக்கு 47 ரூபாயில் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிடைத்தன. இந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. நிர்ணயம் செய்யப்பட்டதைவிட 60 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்தன. சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 41 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஐபிஓ மூலம் ஸ்நோமென் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x