Published : 09 Sep 2018 09:16 AM
Last Updated : 09 Sep 2018 09:16 AM

ஓய்வு பெறுகிறார் ஜாக் மா: கல்விச் சேவையில் முழுமையாக ஈடுபட முடிவு 

சீனாவின் மிகப்பெரிய பணக்கார ரான ஜாக் மா தனது அலிபாபா நிறுவனத்திலிருந்து வரும் திங்கள் அன்று ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். முன்னாள் ஆங்கில ஆசிரி யரான ஜாக் மா, ஒருகாலத்தில் ஆங்கிலம் பேச வராத காரணத் தினால் வேலை கிடைக்காமல் திண் டாடியவர். 1999ல் தன்னுடைய மாணவர்களை வைத்து தொடங் கியதுதான் அலிபாபா நிறுவனம்.

ஆன்லைன் வர்த்தக நிறுவன மான அலிபாபா, சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி யது. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந் தையை முழுவதுமாகத் தனதாக் கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது. ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல் வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் செப்டம் பர் 10, திங்கள் அன்று 54 வயதை நெருங்கும் ஜாக் மா, தான் அலிபாபா நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறுவ தாகக் கூறியுள்ளார். மேலும், இனி கல்வித்துறையை மேம்படுத்து வதற்கான தன்னார்வப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அலிபாபா நிறுவனத் திலிருந்து ஓய்வுபெறுவது ஒரு சகாப்தத்தின் முடிவு என்று கருத வில்லை. மாறாக, ஒரு சகாப்தத் தின் தொடக்கம் என்றே நினைக் கிறேன். கற்றலிலும் கற்பித்தலிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட நான் இனி, என்னுடைய நேரத்தையும் உழைப்பையும் கல்வித்துறைக் காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். அலிபாபா நிறுவனத்தில் அவர் வகித்து வரும் இணை நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் ஜாக் மா இயக்குநர் குழுவில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் செப்டம்பர் 10 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளிலிருந்தே தனது கல்விப் பணியைத் தொடங்கவிருக்கிறார் ஜாக் மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x