Published : 16 Sep 2014 10:55 AM
Last Updated : 16 Sep 2014 10:55 AM

அர்விந்த் சீதாராமன் - இவரைத் தெரியுமா?

# சிஸ்கோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பிரிவின் தலைவர். இங்கு 18 வருடங்கள் வேலை பார்த்தவர். செப்டம்பர் 20-ம் தேதி முதல் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார்.

# சிஸ்கோ நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) பிரிவின் தலைவராக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.

# சென்னை, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவிருக்கிறார். அந் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இணையவிருக்கிறார்.

# தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு மற்றும் புனே பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.

# இவர் கணிப்பொறியியல்துறை விஞ்ஞானியும் கூட. 29 வருட அனுபவம் மிக்கவர். 57 காப்புரிமைகள் இவர் வசம் இருக்கிறது.

# கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ அல்லது பேஸ்புக் போன்ற சர்வதேச அளவில் செயல்படும் ஒரு இந்திய நிறுவனத்தை தான் இறப்பதற்குள் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x