Published : 24 Sep 2014 11:11 AM
Last Updated : 24 Sep 2014 11:11 AM
அடுத்த இரண்டு மூன்று வருடங் களில் எட்டு சதவீத வளர்ச்சி சாத்தியம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் மாறினாலும் கூட இந்தியாவின் வளர்ச்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று புதுடெல்லியில் நடந்த விழா ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
நிதி சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துதல் சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்படுத்துதல், திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார். பணவீக்கத்தைக் குறைப்பதற்கான முக்கிய கருவி நிதிப்பற்றாக்குறையை குறைப்பதுதான் என்றார். மேலும் எட்டு சதவீத வளர்ச்சி மூலம் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.
மோடி அரசு திட்டக் குழுவை கலைத்தது சரியான முடிவு என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். நாட்டின் தேவைக்கு பிறகும் அந்த குழு செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் புதிதாக அமைக்கப்படும் அமைப்பு சிறிதாக இருப்பது நல்லது. அதிகபட்சம் 100 பேர் வரைக்கும் இருக்கலாம் என்றார் சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT