Published : 22 Jun 2019 08:20 AM
Last Updated : 22 Jun 2019 08:20 AM

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.12,305 கோடி உதவித் தொகை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தொகையை விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட் டம் பிப்ரவரி 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ் விவசா யிகளுக்கு இதுவரை ரூ.12,305 கோடி நிதி உதவி வழங்கப்பட் டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி எனும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் தொகையை தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணை களில் வழங்க முடிவு செய்யப் பட்டது. இதன் பலன் அனைத்து 14.5 கோடி விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அரசு அறிவித் தது. விவசாயிகளிடம் நிலம் எவ்வளவு இருந்தாலும், இந்தத் தொகை வழங்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி ஆண்டுக்கு அரசுக்கு ரூ.87,217.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட் டுள்ளது. இதன்படி முதல் தவணைத் தொகை 3,29,52,568 விவசாயி களுக்கும் இரண்டாம் தவணை தொகை 2,85,73,889 விவசாயிகளுக் கும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விவசாயிகளின் வங் கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள் ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் தவணையாக அரசு ரூ.6,590.51 கோடியும், இரண்டாம் தவணையாக ரூ.5,714.77 கோடி தொகையும் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் கிசான் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும். விவசாயிகளின் வங் கிக் கணக்குகள் சரிவர பரிசீலிக்கப் பட்டு உரியவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது என்றார். மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய விவசாயிகள் அடங்கிய பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவற்றின் அடிப் படையில் விவசாயிகளது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

விவசாயிகளின் பட்டியல் பல்வேறு நிலைகளில் பரிசீலிக்கப் பட்டு பல மாநில அரசுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உரிய பட்டியல் அனுப்புமாறு கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார். உரிய பயனாளிகளுக்கு இந்த பலன் போய் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக அவர் கூறி னார். இதனால் பட்டியல் தயாரிப்பு மற்றும் இறுதி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நான்கு மாதங்க ளுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த நிதி உதவித் தொகை செலுத்தப்படும் என்றும் அடுத்தடுத்த தவணை தொகை உரிய காலத்தில் செலுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x